இப்பொழுது எல்லாம் தற்கொலை செய்து கொள்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாக புள்ளி விவரங்கள் கூறுகின்றன. குடும்பத்தில் பிரச்சினை, காதலில் பிரச்சனை, மன அழுத்தம், பரிட்சையில் தோல்வி என்று சின்ன சின்ன காரணங்களுக்கு கூட நம் மனசு உடைந்து போய் விடுகிறது. தற்கொலை என்ற ஒரு நிமிட எண்ணம் எல்லாருக்கும் உடனே வருவதில்லை. பிரச்சனைகளை எப்படி கையாளுவது என்று தெரியாமல் குழம்பும் போது யாரும் அரவணைக்க, தோள் கொடுக்க இல்லாமல் தனிமையில் வாடும் சமயத்தில் இந்த மாதிரியான முடிவை நோக்கி மக்கள் செல்கின்றனர். உங்களிடம் யாராவது வாழ்க்கை போற போக்கை பார்த்தால் பேசாம செத்துடலாம் போல இருக்கு என்று சொன்னால் அசால்ட்டாக அவர்களை கடந்து செல்லாதீர்கள். இதுவும் தற்கொலை எண்ணத்தின் முதல் அறிகுறி தான். மனதில் ஏற்படும் விரக்தி, கோபம், வாழ்க்கையை பற்றிய பயம் தான் அவர்களை இப்படி பேச வைக்கிறது என்று உளவியல் நிபுணர்கள் கூறுகிறார்கள். சரி உங்க நெருங்கிய நண்பரோ அல்லது உறவினரோ ஏன் உங்களுக்கு நெருக்கமான நபராக இருக்கலாம் இப்படி ஒரு முடிவெடுக்க போகிறார்கள் தெரிந்தால் என்ன செய்வீர்கள். கண்டிப்பாக தடுக்கத்தான் முயற்சி செய்வோம். அவர்களிடம் மனம் விட்டு பேசுவோம், ஆறுதல் சொல்வோம். மனதை மாற்ற முயற்சி செய்வோம். இப்படி செய்வதன் மூலம் தற்கொலையை தடுக்க முடியும் என்கிறார்கள் உளவியல் நிபுணர்கள்.
தற்கொலை செய்து கொள்வதற்கு பல நாட்கள் அல்லது மணி நேரங்களுக்கு முன்பாகவே எச்சரிக்கை சமிக்கைகளும் துப்புகளும் வெளிப்படுகின்றன.
“இனியும் என்னால் தொடர முடியாது” “இதற்கு மேல் ஒன்றுமில்லை”அல்லது “அனைத்திற்கும் ஒரு முடிவு காண்கிறேன்.” இதுபோன்ற கருத்துக்கள் எப்போதும் மிக முக்கியமாக கவனத்தில் எடுத்துக் கொள்ளப்படவேண்டும்.
பிறபொதுவான எச்சரிக்கை சமிக்கைகள் கீழ்வருவற்றை உள்ளடக்கும்:
- மன அழுத்தமடைதல் அல்லது பிடிப்பில்லாதிருத்தல்
- கவலையுற்று நடந்து கொள்ளுதல்
- உறவுகளைச் சந்தித்தல் மற்றும் மதிப்பு வாய்ந்த பொருட்களை ஒப்படைத்தல்
- நடத்தை, மனப்பான்மை மற்றும் தோற்றத்தில் குறிப்பிடத்தகுந்த மாற்றம்.
- அளவுக்கதிகமாக மது அருந்துதல், அல்லது போதை மருந்து பயன்படுத்துதல்
- மிகப்பெரிய இழப்பு அல்லது வாழ்க்கை மாற்றத்தால் பாதிக்கப்படுதல்
அதிக எடுத்துக்காட்டுகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன. தற்கொலை செய்து கொள்வதைப் பற்றி சிந்தித்துக் கொள்வதைப் பற்றி சிந்தித்துக் கொண்டிருப்பவரின் அறிகுறிகளாக இவைகள் இருக்கக்கூடும். பெரும்பாலான சமயங்களில் இந்த சூழ்நிலைகள் தற்கொலையில் முடிவதில்லை. ஆனால் பொதுவாக ஒரு நபர் இந்த சமிக்கைகளை அதிக அளவில் வெளிப்படுத்தும்போது தற்கொலைக்கான வாய்ப்பையும் அதிகரிக்கிறது.
சூழ்நிலைகள்
- தற்கொலைகள் அல்லது வன்முறை உள்ள குடம்பப் பிண்ணனி
- பாலியல் அல்லது உடல்ரீதியான தகாத பழக்கம்
- நெருங்கிய நண்பர் அல்லது குடும்ப உறுப்பினரின் மரணம்
- விவாகரத்து அல்லது பிரிவு, உறவு முறிதல்
- படிப்பில் தோல்வி, வரப்போகிற தேர்வுகள், தேர்வு முடிவுகள். வேலை இழப்பு,
- பணிபுரியுமிடத்தில் பிரச்சனை
- வரப்போகிற சட்ட நடவடிக்கை
- சமீபத்திய சிறைவாசம் அல்லது வரக்கூடிய விடுதலை
நடத்தைகள்
- அழுதல்
- சண்டையிடுதல்
- சட்டத்தை மீறுதல்
- உணர்ச்சி வசப்பட்ட செயல்கள்
- தன்னையே காயப்படுத்திக் கொள்ளல்
- மரணம் மற்றும் தற்கொலை பற்றி எழுதுதல்
- முன்ப தற்கொலைக்கு முயற்சித்திருத்தல்
- அதீத நடத்தைகள்
- நடத்தையில் மாற்றங்கள்
உடல்ரீதியான மாற்றங்கள்
- பலவீனம்
- உறக்கத்தில் மாற்றம் – அதிகமாக உறங்குவது அல்லது குறைவாக உறங்குவது
- பசியின்மை
- உடல் எடை கூடுதல் அல்லது குறைதல்
- சிறு உடல் உபாதைகள் அதிகரித்தல்
- பாலுறவு விருப்பத்தில் மாற்றம்
- தோற்றத்தில் திடீர் மாற்றம்
- தோற்றத்தைப் பற்றிய அக்கறையின்மை
- எண்ணங்கள் மற்றும் உணர்வுகள்
தற்கொலை எண்ணங்கள்
- தனிமை – நண்பர்களிடமிருந்து குடும்ப உறுப்பினர்களிடமிருந்து
- தரவுக் குறைவு
- விலக்கல், ஒதுக்கப்பட்டதாக நினைத்தல்
- ஆழ்ந்த வருத்தம் அல்லது குற்ற உணர்ச்சி
- குறுகிய கண்ணோட்டத்தை தாண்டி சிந்திக்க இயலாமை
- பகல்கனவு காணுதல்
- மனக்கவலை மற்றும் அழுத்தம்
- உதவி கிடைக்காமை
- சுயமதிப்பை இழத்தல்
உங்களுக்கு தெரிந்தவரைப் பற்றி நீங்கள் கவலை கொண்டிருந்தால் அவர்களுக்கு உடனடி மன நல மருத்துவ ஆலோசனை அழைத்து செல்வது அவசியம்.
Leave a comment